போராட்ட தியாகங்களுக்கு தலை வணங்கி நான் நேசிக்கும் இந்த மண்ணிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பேன் - அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் சாள்ஸ் கோரிக்கை - Yarl Voice போராட்ட தியாகங்களுக்கு தலை வணங்கி நான் நேசிக்கும் இந்த மண்ணிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பேன் - அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் சாள்ஸ் கோரிக்கை - Yarl Voice

போராட்ட தியாகங்களுக்கு தலை வணங்கி நான் நேசிக்கும் இந்த மண்ணிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பேன் - அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் சாள்ஸ் கோரிக்கை


போராட்ட தியாகங்களுக்கு தலை வணங்கி என்னால் முடிந்த அனைத்தையும் நான் நேசிக்கும் இந்த மண்ணிற்கு செய்ய முயற்சிப்பேன். வடக்கு தெற்கு உறவு பாலமாகச் செயற்பட்டு வலிகளோடு இருக்கும் மக்களை ஆற்றுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தாருங்கள் என வடக்கு மாகாண புதிய ஆளுநரநராகப் பொறுப்பெற்றுள்ள திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கெண்ட பின்னர் உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு மறுத்து தயங்கிய நிலையில் என்னை உற்சாகப்படுத்தி ஒவ்வொரு நாளாக என்னை ஊக்கப்படுத்தியது எனது கணவர் தான். இந்தப் பதவியை ஏற்க வேண்டாமென என்னுடைய குழந்தைகள் என்னோடு முரண்டு பிடித்தனர். இவர்களோடு தான் உங்களை சந்திக்க நான் இன்று வந்திருக்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து அரசாங்க அதிபராக நான் வெளியே சென்ற போது உண்மையாகவே மிகுந்த இலேசான இதயத்தோட சென்றிருந்தேன். ஏனென்றால் எனக்களிக்கப்பட்ட கடமைகளை எனது மனத்திருப்திக்கு நான் நிறைவேற்றியிருந்தேன். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நான் அங்கு முன்னெடுத்திருந்தேன். அந்த நிறைவும் மகிழ்ச்சியும் என் மனதிதை இலோசாக்கியிருந்தது.

ஆனால் இன்று வவுனியா மாவட்டத்தின் வாசலிலே நான் மிதித்த போது அந்த மக்கள் காட்டிய அன்பும,; என்னை எதிர்பார்த்து காத்து நின்ற அவர்கள் காட்டிய அந்த பெரிய ஆதரவும் அதே போல் வட மாகாணத்திற்கு நான் வந்த போது எதிர்பார்க்காத அளவிற்கு அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்; என அனைவரும் அன்பாக பேசியது மீண்டும் என் இதயத்தைக் கனமாக்கியது.

இங்கு அவைத் தலைவர் சிவஞானம் கூறியது போல் இது லேசான விடயமில்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக ஐனாதிபதி பதவியேற்ற நாளில் இருந்து இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஊடகங்கள் ஊடாக நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். பலர் என்னை தொலைபேசியில் அழைத்து இது உண்மையா இது நடக்குமா என்றெல்லாம் கேட்டார்கள். அந்த நேரங்களில் எல்லாம் இந்த விடயத்தை நான் மறுத்தேன்.

அதற்கு காரணம் என்னவென்று சொன்னால் உண்மையாக நான் என்னுடைய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை. அண்மையில் தான் நான் புதியதொரு பதவிக்கான கடமைகளை நான் ஆரம்பித்திருந்தேன். எனவே இந்த விடயத்திலே நான் ஒரு அரச அதிகாரியாக நிதானமாகச் சிந்திக்க வேண்டிய தேவையொன்று இருந்தது.

ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களை அரச சேவையில் கழித்த நான் கடைசிக் காலத்தை நிறைவுறுத்தாமல் வெளியேறுவதென்பது என்னொட வேலை செய்த நன்பர்களுக்கு தெரியும் என்னொட வேலை செய்த சக நிர்வாக அலுவலர்களுக்கு தெரியும் அது எத்தனை பாரதூரமான வேதனையான விடயம் என்று,

ஆகையினால் இது சம்மந்தமாக நான் ஐனாதிபதியின் செயலாளருடன் தொடர்ந்து உரையாடியதன் காரணமாக கடைசியாக இதை நான் ஏற்றுக் கொண்டு எனக்குரிய அத்தனை விடயங்களையும் தாங்கள் கவனத்தில் கொள்வதாக ஐனாதிபதி அவர்கள் அமைச்சரவைக்கு சென்று அந்த அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக என்னுடைய சேவைக்கால நன்மைகளை பாதுகாத்துக் கொண்டு இந்த நியமனத்தை எனக்கு அளித்திருக்கின்றார்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் இது வந்து நிச்pசயமாக எனக்காக மட்டும் அல்லது நான் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டும் எடுத்த நடவடிக்கை அல்ல. வடக்கு மாகாணத்தின் மக்களின் உணர்வுகளுக்காக வட மாகாண மக்களின் தேவைகளுக்காக, வட மாகாண மக்களின் ஏக்ககங்களுக்காக அவர் தர விரும்பிய ஒரு விடயமாகத் தான் நான் இதனை பார்க்கின்றென்.

எனவே நான் பதவியேற்ற போது என்னிடம் சொல்லப்பட்ட ஒரே ஒரு விடயம் வட மாகாண மக்கள் நிறைய வேதனைகளோடும் வலிகளோடும் காயங்களோடம் இருக்கின்றார்கள். அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரே ஒரு தேவை தான் எமக்கு இருக்கின்றது.

அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அந்த மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் போயிரக்கின்ற எந்தவொரு விடங்களோ அவற்றை எல்லாம் செய்த முடிப்பதற்கான சகல அதிகாரத்தையும் அதற்கான சகல ஒத்துழைப்பையும் இந்த ஐனாதிபதி செயலகம் வழங்குமென்று தான். அந்த உத்தரவாத செய்தியோடு தான் நான் இங்கு வந்திருக்கின்றேன்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது போல நான் இந்த மண்ணின் நாடித் துடிப்புகளை அறிந்திருக்கின்றேன். மக்களின் உள்ளங்களை நான் அறிந்திருக்கின்றேன். அரசாங்க உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிக்கல்களை நான் அறிந்திருக்கிறேன்.

வவுனியா மாவட்டத்திலே மூன்று இலட்சம் மக்களை நாங்கள் மூன்றரை வருடங்கள் நாங்கள் பராமரித்தோம். வவுனியா மாட்ட மக்களாக ஒன்றரை இலட்சம் என எல்லாமாகச் சேர்த்து நான்கரை இலட்சம் மக்களை நான் அன்னியோன்னியமாகப் பார்த்திருக்கின்றேன். எனவே இந்த மாகாணத்தில் இருக்கின்ற பல பேர்களுக்கு என்னைத் தெரியும் எனக்கும் பல பேர்களைத் தெரியும்.

அப்படியிருந்தும் கடந்த எட்டரை வருடங்களாக இந்த மாகாணத்திற்கோ ஏன் என்னுடைய வவுனியா மாவட்டத்திற்கு கூட என்னால் வர முடியாமல் போய் விட்டது. அதற்கான ஒரு தேவை இருந்த போதும் என்னுடைய கடும் வேலையின் காரணமாக நான் இங்கு வரவில்லை. சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நான் விரும்பாமலேயே எனக்கு அந்தப் பதவி தரப்பட்டது. 67 வீதமான வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற அந்தப் பணிப்பாளர் நாயகம் பதவியை நான் ஏற்ற போது 2029 ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தின் வருமானத்திலே ஆககக் கூடியளவு வருமானத்தை 975 பில்லியன் ருபாவை வருமானமாக ஈட்டிக் கொடுத்தேன்.

இங்கு பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் கூறியது போல் என்னை இடமாற்றுவதற்கான ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று வீதியில் இறங்கிய என்னுடைய உத்தியோகத்தர்கள் நான் தடுத்தும் கேளாமல் வீதியிலே போராடி கொழும்பு மாநகரையே சம்பித நிலைக்கு கொண்டு வந்து; அந்த அமைச்சரவைப் பத்திரத்தை மீளப் பெறச் செய்து திருமப்பவும் அந்தப் பதவியில் என்னை இருத்தினார்கள்.

இப்போது கூட எனக்கு பதவி உயரவு வழங்கப்பட்ட போது கூட இது உங்களுக்கான பதவி உயர:வு என்பதற்காகவே நாங்கள் அமைதி காக்கின்றோம் என்று சொல்லித் தான் என்னை செயலார் பதவிக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது ஐனாதிபதி செயலாளரிடம் நான் கேட்டேன் எத்தனையோ செயலாளர் பதவிகள் இருக்கும் போது சுகாதார அமைச்சை ஏன் என்னிடம் தந்தீர்கள் என்று நான் கேட்டிருந்தேன். அதற்குள் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஐனாதிபதி எடுத்த தீர்மானம் என்றும் இதிலே யாரும் கதைப்பதற்கில்லை என்று சொன்னார்.

இதன் பின் பதவிகளைப் பெற்று அங்கு நான் சொன்ற போது அரசாங்க மருத்துவர்கள் ஒரு புறம் தாதிய சங்கம் ஒரு புறம் என பல பிரச்சனைகள் முன்வைத்தார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளெ அந்தப் பிரச்சனைகளில் 70 வீதமானவற்றை நான் தீர்த்துவிட்டுத் தான் இங்கு வந்திரக்கின்றேன்.

ஆனால் எனக்கு ஒரே ஒரு வேதனை என்னவென்றால் தற்போது அமைச்சரினால் அனுமதிக்கப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற யாழ்ப்பாண பொது வைத்திய சாலைக்கான இருதய சிகிச்சைப் பரிவிற்கான கட்டிடத்திற்கான அனுமதி வவுனியா வைத்திய சாலைக்கான கட்டிடத்திற்கான அனுமதிக்கான அனுமதி முல்லைத்தீவு மன்னார் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டிட அனுமதிகள் போன்ற அமைச்சரவைப் பத்திரங்களை முழுமை பெற முடியாத நிலையில் நான் விட்டு விட்டு வந்திருக்கின்றேன்.

இருந்தாலும் அங்கு இருக்கின்ற அத்தனை பேர்களுமு; அத்தனை மேலதிக செயலாளர்களும் பணியாளர்களும் கூறிய ஒரே ஒரு விடயங்ம் நீங்கள் இந்த இடத்தில் இருந்த போனாலும் நாங்கள் நிச்சயமாக அங்கு வருவோம். வட மாகாண மக்களின் அத்தனை தேவைகளையும் தீர்ப்பதற்கு உங்களுக்கு வலதுகரமாக நாங்கள் நிற்போம். எதற்கும் நீங்கள் யோசிக்க வேண்டாம் வைத்தியசாலைகளின் தேவைகளை தீர்த்த வைப்பதாகவும கூறியிருக்கின்றார்கள்.

ஐனாதிபதியின் செயலாளர் எங்களுக்கு கூறிய முக்கியமான ஒரு விடயம் என்னவெனில் வட மாகாணத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் இருக்கின்ற முதலாவது வைத்தியசாலைகளின் தேவை இரண்டாவது கல்வித்துறையிலே காணப்படுகின்ற தேவைகள் அடுத்ததாக இங்கு காணப்படுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் விவசாய வசதிகள் போன்றவற்றை உடனடியாகச் செய்து கொடுக்கும் படியாக பணிப்புரை விடுத்திரக்கின்றார்.

அதற்கான வேலைத் திட்டங்களை நிச்சயமாக விரைவாக ஆரம்பிப்தற்கு அதிகாரிகளுக்கு நான் உறுதுணையாக இரப்பபேன். அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் முரண்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் வர்க்க முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு ஆளுநராக மட்டுமல்ல உங்களுடைய இந்த மாவட்டத்தின் மாகாணத்தின் ஒருவராக இந்த மாகாணத்திலே முன்னெடுக்க இருக்கிறென்.

குறிப்பாக அவைத் தலைவர் அவர்கள் சரியாக இணங்காட்டி என்னுடைய பிண்ணணியை நான் யாழ்ப்பாண மாவட்டத்திலே இளவாலை என்ற கிராமத்திலே சொந்த இடமாகக் கொண்டவர் நான் அஙகு பிறந்த வளர்ந்து பின்னர் என்னுடைய பெற்றோரின் உத்தியோகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கும் சென்றாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த நிர்வாக சேவையில் நான் இணைந்து கொண்டேன.

ஆனால் என்னுடைய சேவைக்காலத்தில் என்னுடைய சொந்த மாவட்டம் அதாவது நான் பிறந்த மாவட்டத்திலே சேவையாற்றுகின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. அதை நான் எப்பொதும் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று அந்தச் சேவையை முடித்து தான் நான் உங்களோட சேவையாற்றுகின்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது. அதுவும் இந்த மாகாணத்தின் ஆளுநராக நான் இஙகு வந்திருக்கின்றேன்.

உங்களுக்கான அத்தனை விடயங்களையும் பார்த்து அவற்றை எவ்விதம் செய்கின்ற என்ற அடிப்படையில் ஐனாதிபதி செயலகத்துடன் நான் கலந்தரையாடி அந்த விடயங்களை முடித்த வைப்பதற்கான முயற்சியை நான் நிச்சயமாக மேற்கொள்ளுவேன். இதுவொரு செய்தி உங்களுக்கு வந்திரக்கின்ற செய்து. அதாவது உங்களுக்கு ஐனாதிபதி செயலகத்திற்கும் இங்கிருக்கின்ற மக்களுக்குமான இணைப்பு பாலமாக ஆளுநர் செயலகம் செயற்படும்.

நிச்யமாக அங்கிருக்கின்ற அத்தனை உத்தியோகத்தர்களும் சொன்னார்கள் வடக்கு மாகாணத்திற்கு எங்களுடைய ஆதரவுக் கரம் உங்களோட இருக்குமென்று. பெரும்பான்மை இன அரச அதிகாரிகள் மிகக் கவலையோடு இருக்கிறார்கள். இந்த மக்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் செய்த கொடுக்க வேண்டுமென்று நினை;கிறார்கள்.

அழுத்தங்களுக்கு அப்பால் விமர்சனங்களுக்கு அப்பால் முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுவீர்கள் என இங்கு உறுதியளித்திருக்கின்றீர்கள். அதை தான் நானும் எதிர்பார்க்கின்றேன்.

உள்ளங்களிலே இருக்கின்ற அழுத்தங்கள் உள்ளங்களிலே இருக்கின்ற இறுக்கக்ங்கள் உங்களது உள்ளங்களிலே இருக்கின்ற குறைகளை எல்லாம் ஒதுக்கி வைத்தவிட்டு இதயசுத்தியோடும் திறந்த மனத்தோடும் குறைகள் இருந்தால் தவறுகள் இருந்தால் நேரே சுட்டிக்காட்டுகின்றவர்களாக என்னோடு இணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நான் இங்கு வந்திரப்பது யாரையும் குஐற சொல்வதற்கும் அல்ல. யாரையும் எனக்காக மாற்றிக் கொள்வதற்கும் அல்ல. யாரையும் விமர்சிப்பதற்கும் அல்ல. யாரையும் தள்ளி வைப்பதற்கும் அல்ல. எனவே உங்களுடைய மனங்களிலே ஒரே யொரு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த மாகாணத்திற்குச் சேவை செய்வதற்காகத் தான் நான் வந்திருக்கின்றேன்.

ஏனென்றால் என்னுடைய பிள்ளைகள் கொழும்பிலே படித்துக் கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலே வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். எனது வயதான தாய் என்னோட இருக்கின்றார்.

இத்தனைக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கு மத்தியிலே நான் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் உண்மையாக ஒன்றரை மாதங்களாக போராடி மனப்போராட்டத்தின் மத்தியிலே நான் இதை ஏற்றுக் கொண்டேன் என்றால் என்னுடைய குடும்பத்தின் பல சுகங்களை அவர்களுடைய வாழ்க்கையை நான் அர்ப்பணித்து தான் இங்கு வந்திருக்கின்றேன்.

எனவெ உங்களது ஆலோசனைகளும் அறிவுரைகளும் உங்களது ஆதரவும் எனக்கு நிச்சயமாகத் தேவை. நிச்சயமாக இந்த மண்ணை நான் நேசிக்கின்றேன். முழுமையாக நேசிக்கின்றென். என்னுடைய பெற்றோர்கள் பொற்றோரின் பெற்றறோர்கள் என்னுடைய உறவுவினர்கள் இந்த மண்ணிற்கான நிறையப் போராடியிருக்கின்றார்கள். எனவே அவற்றுக்காக அவர்களுடைய அந்தத் தியாகங்களுக்கு தலை வணங்கி நிச்சயமாக இந்த மண்ணிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு முயற்சிப்பேன்.

இந்த உறவுப் பாலத்தை பலமாகப் பிடித்தக் கொண்டு முப்பது வருட யுத்தத்தில் நாங்கள் இழந்து போனவற்றையுமு; கடந்த காலங்களில் நாங்கள் அடைந்து கொள்ள முடியாதவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளும் படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்தச் சந்தர்ப்பத்தை தான் ஐனாதிபதி இப்பொது உங்களுக்கு ஏற்படுத்தி தந்திருக்கின்றார். இல்லாவிட்டால் இந்த நியமனத்தை இவ்வளவு காலம் தாமதித்து இவ்வளவு முயற்சிக்கு பின்னால் செய்திருக்கின்றார் என்றால் அதில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே; அனைத்த விடயங்களிலம் உங்கள் ஆதரவு எனக்குத் தேவை. பாராமன்ற உறுப்பினர்களே அரசியல் தலைவர்ளே அரச அதிகாரிகளே உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post