யாழ்ப்பாண பழங்கால ஒளிப் படங்களின் கண்காட்சி - Yarl Voice யாழ்ப்பாண பழங்கால ஒளிப் படங்களின் கண்காட்சி - Yarl Voice

யாழ்ப்பாண பழங்கால ஒளிப் படங்களின் கண்காட்சி

யாழ்ப்பாண பழங்கால ஒளிப் படங்களின் திருவிழா 2020 என்னும் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

யாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இதற்கமைய நாளையும் இக் கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1800 களின் இறுதியில் முதலாவது தலைமுறைக் கலைஞரான எஸ். கே. லோட்டன் கனகரட்ணம் பயன்படுத்திய ஒளிப்படகருவி உட்பட 50 இற்கு மேற்பட்ட பழைய ஒளிக்கருவிகளின் பாகங்கள் பழைய ஒளிப்பட கலையகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பழைய படங்கள் என் பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கண்காட்சியானது தொடர்ந்து மூன்று நாட்களும் காலை; 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை; 5 மணி வரை நடைபெற்று வருகின்றது. இதில் பெருமளவிலானோர் கலந்து கொண்ட கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post