யாழ்ப்பாண விழிப்புலணற்றோர் சங்க விடுதி திறப்பு - Yarl Voice யாழ்ப்பாண விழிப்புலணற்றோர் சங்க விடுதி திறப்பு - Yarl Voice

யாழ்ப்பாண விழிப்புலணற்றோர் சங்க விடுதி திறப்பு

யாழ்ப்பாண விழிப்புலணற்றோர் சங்கத்தின் கைதடி தொழில் பூங்கா வளாக விடுதி அங்குரார்ப்பண தகர விழாவும் ஆண்கள் விடுதி திறப்பு விழாவும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புலனற்றோர் சங்கத்தின் யாழ் மாவட்டத் தலைவர் சட்டத்தரணி ஏ.எஸ்.அற்புதராஐ; தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஐh செல்வரட்னம் கலந்து கொண்டு விடுதியைத் திறந்து வைத்தார்.

இதன் போது விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு நிறுவனக் கொடியை சங்கத் தலைவர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தன. இதன் போது மங்கள வாத்திய இசைக் கச்சேரியும் கலை நிகழ:வுகளும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் மதத் தலைவர்கள்இ அரச அதிகாரிகள் விழிப்புலனற்றோர் சங்க நிர்வாகிககள் விழிப்புலனற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post