யாழ்ப்பாண தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் உலகத் தாய்மொழிநாள் விழா சாவகச்சேரியில்.. - Yarl Voice யாழ்ப்பாண தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் உலகத் தாய்மொழிநாள் விழா சாவகச்சேரியில்.. - Yarl Voice

யாழ்ப்பாண தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் உலகத் தாய்மொழிநாள் விழா சாவகச்சேரியில்..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழிநாள் விழாவும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துக் கல்லூரியின் அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

இந் நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ்இ முனைவர் மணோன்மணி சண்முகதாஸ்இ மட்டுவில் பெற்ற மாமணி செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் உட்பட கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலை நிகழ:வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post