போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு - ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை - Yarl Voice போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு - ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை - Yarl Voice

போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு - ஐனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு செல்லும் பிரதான வீதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மத்திய மற்றும் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளை விரைந்து நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சிரேஷ்ட்ட அதிகாரிகளுடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

இதவேளை கொள்ளுபிட்டியிலிருந்து ஆரம்பமாகும் மெரைன் ட்ரைவ் கடலோர பாதையை பாணந்துரை வரை நீடிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலாவது கட்டமாக மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான நிர்மாணப்பணிகளை முறையாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post