மாவை இல்லாவிட்டால் நான் தான், கொடுக்காவிட்டால் எதிர்ப்பேன் - சிவாஞானம் அதிரடி - Yarl Voice மாவை இல்லாவிட்டால் நான் தான், கொடுக்காவிட்டால் எதிர்ப்பேன் - சிவாஞானம் அதிரடி - Yarl Voice

மாவை இல்லாவிட்டால் நான் தான், கொடுக்காவிட்டால் எதிர்ப்பேன் - சிவாஞானம் அதிரடி

மாகாணத்திற்கு என்னுடைய சேவை உண்மையில் தேவை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. அந்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவே பொருத்தமானவர். ஆனாலும் ஏதேனும் காரணங்களால் அவர் களமிறங்காதவிடத்து அடுத்த தெரிவு நானாகவே இருக்க வேண்டும். இதனை கட்சி செய்யாதவிடத்து அதற்கு எதிராக என்னுடைய செயற்பாடுகளை நான் முன்னெடுப்பேன்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ,கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் ஒரு நிதானமான கொள்கையை பிற்பற்றுபவன் நான். பாராளுமன்றத் தேர்தலில் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டிருந்தேன். இப்ப இருக்கிற எல்லாரும் 2010 இற்குப் பிறகு வந்தவர்கள். ஆனால் 2001  இல் இருந்து 2001, 2004, 2010 அகிய பாராளுமன்றத் தேர்தல்களிலில் போட்டியிட்டிருந்தேன்.

ஆனால் இப்பொழுது மாகாண சபையில் தான் என்னுடைய சேவை தேவை என்று நான் நினைக்கின்றேன். இனிமேல் வரக் கூடிய ஒரு சபை இதுவரையிலும் இருந்த சபையிலும் பார்க்க எந்த நிலையில் இருக்குமென்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு திறமான சபையிலையே எங்களுடைய செயற்பாடுகள் திறமையாக அமையவில்லை என்பது என்னுடைய கவலை.

ஆகவே என்னுடைய சேவை உண்மையாக மாகாணத்திற்குத் தான் தேவை என்பது என்னுடைய கருத்து. மதீப்பீடுகளின் அடிப்படையில் எனக்குள் அந்தக் கருத்து இருக்க வேண்டும். ஆகவே அடுத்த ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமாக இருந்தால் நான் மாகாண சபையுடாக மக்களுக்குச் சேவையாற்றலாம். சேவையாற்ற வேண்டுமென்ற கருத்தின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி நான் சிந்திப்பதில்லை.

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து பின்னர் தான் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இப்ப இருக்கிற சூழ்நிலையில் மாவை சேனாதிராசா தான் தலைமைத்துவத்தோடு ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களது ஆதரவோடு பொருத்தமானவராக இருப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியான நிலை உருவாகி மாவை சேனாதிராசா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரித்துச் செயற்படுவது தான் என்னுடைய கருத்து. ஆனால் அவர் களமிறங்காவிட்டால் அந்த இடத்திற்கு மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை அந்த மாகாண நிர்வாகம் மாகாண ஏற்பாடுகள் சட்டங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கின்ற வகையில் எனக்குள் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை நிச்சயமாக நான் முன்வைப்பேன்.

இந்த விடயத்தில் இதற்கு மாறாக கட்சி ஒரு முடிவெடுத்தால் அது மக்களின் தீர்ப்பு. அப்படியான தேவை ஏற்பட்டால் அல்லது எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் இது தான் இந்த நாட்டு மக்களுடைய கருத்து விதி என்று நினைத்து ஒதுங்கி விடுவது எனக்குப் பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் அவ்வாறான தவறான ஒரு தெரீவு வருகின்ற போது அதற்கு எதிரான கருத்தை நான் மக்களுக்குச் சொல்லியே வைப்பேன். சொல்லுவேன். அது சுயநலமாக இருக்காது. பொது நலமாக இருக்கும்;. அப்படியான ஒருவரை கட்சி சிந்திக்குதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது சபையை நிர்வகித்து ஓரளவிற்கு ஒழங்குபடுத்தி வைத்தபின் பின்னர் வருகின்றவர்கள் அதைப் பின் தொடர்ந்து நடப்பதற்கு ஒரு முன்னுதாரணமான சபையாக அடுத்த சபையை உருவாக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

ஆக வெறுமனே கதிரையில் இருந்து கலாட்டும் இடம் அல்ல அது. பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டிற்கான இடம். அதிலும் நிர்வாகப் பதவிகளுக்கு வரக் கூடியவர்கள் சட்டம் தெரிந்தவர்கள் அனுபவம் உள்ளவர்கள் தொடர்பாடல் உள்ளவர்கள் இதற்கு வர வேண்டுமென்று நான் எதிர்பார்க்கின்றேன். ஆனால் தமிழரசுக் கட்சியாலோ அல்லது கூட்டமைப்பாலோ அவ்வாறான சூழ்நிலை இல்லையென்றால் அதற்கு இடமளித்துவிட்டு தனிப்பட்ட முறையில் என்னுடைய செயற்பாடுகள் அமையும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post