ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் யாழில் ஊடகவியலாளர்களுடன் சீறிப் பாய்ந்த தொண்டமான் - Yarl Voice ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் யாழில் ஊடகவியலாளர்களுடன் சீறிப் பாய்ந்த தொண்டமான் - Yarl Voice

ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் யாழில் ஊடகவியலாளர்களுடன் சீறிப் பாய்ந்த தொண்டமான்
















தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளக் கொடுப்பனவு தைப்பொங்கலுக்கு கிடைக்குமென்று நான் சொல்லவில்லை. அந்தக் கொடப்பனவானது மார்ச் முதலாம் திகதி நிச்சயம் கிடைக்கும் என யாழில் தெரிவித்துள்ள சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியியலாளர்கள் மீது பாய்ந்துள்ளார்.

யுhழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்து யாழ் பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார். இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குடந்த முறை யாழ்ப்பாணம் வந்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளக் கொடுப்பனவு தைப்பொங்கலுக்கு கிடைக்குமென்று கூறியிருந்தீர்கள். அது இன்னும் கிடைக்காத நிலையில் எப்போது கிடைக்குமென்று ஊடகவியலாளர்  கேள்வி எழுப்பியிரந்தார்.

ஆதற்குப் பதிலளித்த அமைச்சர் அவ்வாறு தைப்பொங்கலுக்கு முன்னர் கிடைக்குமென்று நான் சொல்லவில்லை என்றும் நான் சொல்லுறதைக் கேளு. நீயா பேசிட்டு இருந்தா நான் எப்படி என்று ஒருமையில் பேசினார்.

மேலும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று தான் நான் சொல்லியிருந்தேன். தை பிறந்த அன்னு ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச ஆயிரம் ருபா கொடுப்பனவு கொடக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆகையினால் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கட்டாயம் கிடைக்கும் என்று பதிலளித்தார். இவ்வாறு தெரிவித்த அமைச்சர் ஊடகம் என்றால் என்ன என்று கூறியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post