காதலர் தினத்தில் பிரதமர் மகிந்த வெளியிட்ட தகவல் - Yarl Voice காதலர் தினத்தில் பிரதமர் மகிந்த வெளியிட்ட தகவல் - Yarl Voice

காதலர் தினத்தில் பிரதமர் மகிந்த வெளியிட்ட தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியாரான சிரந்தி ராஜபக்ஷவுடன் தனது முகப் புத்தகத்தில் அவர்களது காதலர் தினத்தை முன்னிட்டு தம் இருவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதோடு காதலர் தினக் கருத்தையும் வெளியிட்டிருக்கின்றார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இன்றைய தினத்தில் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.

உண்மையான அன்பின் ஆசீர்வாதம் இல்லாத வாழ்க்கை வெறுமையாகவும் குறிக்கோள் இல்லதும் இருப்பதால் அன்பு வைத்திருக்கும் சக்தியைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

இலங்கையர்களாக நாம் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதற்காக இன்றைய நாளில் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

ஏனெனின் அன்பு நம்மை ஒன்றிணைக்கும்போது இலங்கையர்களாகிய எம்மை தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post