மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான வேலைத்திட்டமும் அதனை தீர்ப்பதற்கு ஏற்ற ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளது.

எனினும் அதனை செயற்படுத்துவதற்கு முதலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம்இ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆகவே தற்போது அதில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது அர்த்தமற்றது.

அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புரிந்துகொள்ள  வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post