வடக்கு முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவனை கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்க வேண்டும் - வடக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வலியுறுத்து - Yarl Voice வடக்கு முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவனை கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்க வேண்டும் - வடக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வலியுறுத்து - Yarl Voice

வடக்கு முன்னாள் ஆளுநர் சுரேன் இராகவனை கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்க வேண்டும் - வடக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வலியுறுத்து

வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி பாராளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்கவேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் யாழ் மண்ணிற்கு விஜயம் செய்த முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்வேறு துறையைச்சார்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக அமைப்புக்கள்  மற்றும் இளைஞர் அமைப்புக்களைச்சேர்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்த மண்ணுக்கான சேவைகளை ஓர் ஆளுநராக பிரதிபலன் பராது வழங்கியதுபோன்று தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஓர் வேட்பாளராக வரவேண்டும் என்று புலம்பெயர்தமிழர்கள் உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்பாக  அவர்கள்  வேண்டுகோள் விடுத்தனர்.

ஆளுநராக இருந்த காலப்பகுதியில் மக்களுக்கு நலன்தரும் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றின் தொடர்ச்சியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அது தொடர்பிலான ஆற்றலுள்ளவர்களே நம் மண்ணுக்குவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவதற்கான ஓர்பாலமாக முன்னாள் ஆளுநர் அவர்கள் இருப்பார் என்றும்  குறிப்பிட்டனர்.

எனவே முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்வாங்கி பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும் அதன்மூலம் அவரது சேவைகள் தமிழ்மக்களுக்கு மீண்டும் தொடரவேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post