இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி தான் - ரோகித்சர்மா புகழாரம் - Yarl Voice இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி தான் - ரோகித்சர்மா புகழாரம் - Yarl Voice

இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி தான் - ரோகித்சர்மா புகழாரம்

விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கி அதனை சில ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இதற்குக் காரணம் விராட் கோலி தன்னம்பிக்கையை அணி வீரர்களிடத்தில் செலுத்தியிருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் பெரிய அளவில் கோலியைப் புகழ்ந்து பேசிய நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணி கண்டதிலேயே தோனிதான் ஆகச்சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.

கர்லி டேல்ஸ் என்ற சாட் ஷோவில் ரோஹித் சர்மா கூறுகையில் 'இந்தியாவுக்கே தெரியும் எம்.எஸ்.தோனிதான் அப்படிப்பட்டவர் என்பது. களத்தில் அவர் பல நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். இப்போது நாம் பார்க்கிறோம் அவர்தான் இந்தியாவின் ஆகச்சிறந்த கேப்டன் என்பதை. மூன்று ஐசிசி கோப்பைகள் ஐபிஎல் சாம்பியன் பட்டங்கள...

இந்தியா பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் தோனிதான். இதற்குக் காரணம் இருக்கிறது. அவர் அழுத்தமான சூழ்நிலைகளில் மிகவும் அமைதியானவர் நிதானமானவர்.

இளம் பவுலர்கள் சில வேளைகளில் பிரஷர் ஆகும் போது தோனி எப்படிக் கையாண்டார் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.நேராக பவுலரிடம் சென்று அவர் தோள் மேல் கையைப் போட்டு அவர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிவுறுத்துவார்.

அணியின் மூத்த வீரர் ஒருவர் இளம் வீரர் ஒருவரை அப்படி நடத்தும் போது அவருக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதோடு அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற விழைவு ஏற்படும்.' என்றார் ரோஹித் சர்மா.

தோனியின் கேப்டன்சியில்தான் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post