அதிபர் ஆசிரியர் நாளை சுகயீனலீவுப் போராட்டம்! ஒத்துழைக்குமாறு ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை - Yarl Voice அதிபர் ஆசிரியர் நாளை சுகயீனலீவுப் போராட்டம்! ஒத்துழைக்குமாறு ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை - Yarl Voice

அதிபர் ஆசிரியர் நாளை சுகயீனலீவுப் போராட்டம்! ஒத்துழைக்குமாறு ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை

நாளை 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து  ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாரிகளினாலோ அல்லது வேறுவகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர்இ ஆசிரியர்களுக்கு ஏற்படுமாயின்  போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் அதனை பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து அனைத்து அதிபர் ஆசிரியர்களும்  சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post