உண்மை கண்டறியப்பட வேண்டும் - சம்மந்தன், விலகினால் சர்வதேசம் மாற்று வழி-சுமந்திரன் - Yarl Voice உண்மை கண்டறியப்பட வேண்டும் - சம்மந்தன், விலகினால் சர்வதேசம் மாற்று வழி-சுமந்திரன் - Yarl Voice

உண்மை கண்டறியப்பட வேண்டும் - சம்மந்தன், விலகினால் சர்வதேசம் மாற்று வழி-சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடக சந்திப்பொன்றை யாழிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று  நடாத்தியது. இதன் போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் செயலாளர் துரைராஐசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் nஐனிவா விவகாரங்கள் தொடர்பிலேயே சம்மந்தனும் சுமந்திரனும் கருத்து வெளியிட்டிருந்தனர். ஏனைய விடயங்கள் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.  இதன் போது nஐனிவா விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்கள் அது தொடர்பாக கேள்விகளுக்கு மாத்திரம் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பில் இரா சம்மந்தன் தெரிவித்ததாவது..

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஒரு முடிவிற்கு வந்தது. அந்த யுத்தம் முடிவிற்கு வந்த பொழுதும் அதற்கு முன்பதாகவும் சர்வதேச மனித உரிமைச் சட்டமும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் மிகவும் மோசமாக மீறப்பட்டு பல போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. யுத்தம் முடிவிற்கு வந்த சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்கு வந்திருந்தார். ஏனெனில் யுத்தம் சம்மந்தமாக களநிலைமைகளை அறிவிப்பதற்காகவும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவைச் சந்தித்த பொழுது அவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக பொறுப்புக் கூறல் சம்மந்தமாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு வழங்கப்பட்டது. அவருடைய பத்திரிகை வெளியீட்டில் அந்தக் கருமம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆதைத் தொடர்ந்து இவ்விடயம் சம்மந்தமாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. பான்கீமூன் அவர்கள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையில் இந்த விடயம் சம்மந்தமாக விசாரணை நடாத்தி தனக்கு ஆலொசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.

அதாவது பொறுப்புக் கூறல் விடயத்தை முன்னெடுப்பதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விடயம் சம்மந்தமாக விசாரணை நடாத்துவதற்கு இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவும் ஒரு குழுவை நியமித்தார். செயலாளர் நாயகம் நியமித்த குழு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்தக் கருமங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது இவ்விடயம் சம்மந்தமாக நாங்கள் எடுத்த சில முயற்சிகளின் காரணமாக விசெசமாக அமெரிக்க இராஐhங்க அமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்தக் கருமங்கள் சம்மந்தமாக முறையான விசாரணையொன்று நடைபெற வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமெரிக்காவினால் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடகள் சபையினுடைய மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆந்தப் பிரேரணை சம்மந்தமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. விவாதங்கள் நடைபெற்றது. இறுதியில் 2015 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தான் 30.1 என்ற தீர்மானம் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது அதில் பொறுப்புக் கூறல் சம்மந்தமாக மற்றும் கையாள வேண்டிய கருமங்கள் சம்மந்தமாக அந்தத் தீர்மானத்தில் விரிவாகக் கூறப்பட்டிருந்தது. அதற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு வருட கால அவகாசம் முடிவடைந்த பிறகு இலங்கை அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு மீண்டும் கால அவகாசம் கேட்டது.

இதற்கமைய 2019 வரையில் அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்திற்குள்ளும் இந்தக் கருமத்தை நிறைவிற்கு கொண்டு வராமல் 2019 ஆம் ஆண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு இன்றும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பிரேரணை நிறைவேற்றுவது சம்மந்தமான கடமைகளைக் கையாளுவதற்கு அவர்களு;ககு தற்போது 2021 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான் சூழலில் தான் யுத்தம் நடைபெற்ற பொழுது ஆட்சியில் இருந்தவர்கள் தற்பொது மீண்டும் ஆட்சிக்கு திரும்பி வந்து அந்தப் பிரேரணையில் இருந்து விலகுவதாக இன்றைக்கு அவரகள் கூறியிரக்கின்றார்கள். 2015 ஆம் ஆண்டு இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பொழுது பலவிதமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்களும் அந்தப் பிரேரணைக்கு தங்களுடைய இணை அனுசரணையை வழங்குவதாகக் கூறி அந்தப் பிரேரணையை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்றைக்கு அந்தப் பிரேரணையில் இரந்த தாங்கள் விலகுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து ஒருவர் விலகலாம். அது அவர்களுடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் அந்த விலகல் என்பது அந்தப் பிரேரணையை எவ்விதமாகவும் பாதிக்க முடியாது. ஆகையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை பிரேரணையாகவே இருக்கும்.

ஒருவர் அதிலிருந்த விலகுகின்றார் என்ற காரணத்தின் நிமித்தம் அந்தப் பிரேரணை செயலிழக்காது. அதாவது தனது தகுதியை அது இழக்காது. இந்த விடயம் சம்மந்தமாக மேலதிக விளக்கத்தை சுமந்திரன் வழங்குவார் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சுமந்திரன் --

சும்மந்தன் ஐயா கூறிய பின்னணியில் தான் என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தகிறேன். குடந்த 2015 ஆம் ஆண்ட 30.1. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 34 என்ற தீர்மானம் 2017 ஆம் ஆஅண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. 40.1 என்ற தீர்மானம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்கள் மூன்றும் ஒரே தீர்மானங்கள் தான். ஒரே வசன நடை. அதே தீர்மானங்கள் தான். அதில் மாற்றமில்லை. 2015 இல் 30 ஆவது கூட்டத் தொடரில் அது நிறைவேற்றப்பட்டதால் அதற்கு இலக்கம் 30.1 என்று கொடுக்கப்பட்டது. 34 ஆவது கூட்டத் தொடரில் அடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் 34.1 என்ற தீர்மானம் என்று பெயர் கொடக்கப்பட்டிருக்கிறது.

40 ஆவது கூட்டத் தொடரில் அடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதற்கு 40.1 என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் இப்ப ஆரம்பமாகி நடக்கப் போகிற கூட்டத் தொடர் 44 ஆவது கூட்டத் தொடராக இருக்கிறது. 

ஆகவே ஏற்கனவே நடந்து முடிந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்மந்தமாக இப்ப நடக்கப் போகிற கூட்டத் தொடரில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றுவதில்லை. அது அந்தக் கூட்டத்தொடரிலே நிறைவேற்றிய தீர்மானமாகவே இருக்கும். கட்சித் தலைவர் சம்மந்தன் ஐயா கூறியது போல அதனுடைய வலு எந்த வகையிலும் இழக்கப்பட மாட்டாது. அது நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இலங்கையும் அதற்கு இணை அனுசரணை கொடுத்தபடியால் வாக்கெடுப்பு இல்லாமல் அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முதலில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறிப்பாக 2012, 2013,2014 ஆம் ஆண்டகளில் அப்படியாக இல்லாமல் இலங்கை எதிர்க்கத்தக்கதாக வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக இருக்கிறது. இலங்கை எதிர்க்கிறது என்ற காரணத்திற்காக அந்தத் தீர்மானங்கள் வலுவிழந்த தீர்மானங்கள் அல்ல.

வுpசெடமாக 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஆதில் ஒரு சர்வதேச விசாரணையொன்று நடாத்தும் படியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலவலகத்திற்கு ஆணையொன்று கொடுக்கப்பட்டது. ஆயினும் இலங்கை அந்த தீர்மானத்தை எதிர்த்தது. ஆனால் அந்த தீர்மானத்திற்கமைய சர்வதேச விசாரணை நடைபெற்றது.

ஆகையினால் இலங்கை எதிர்த்ததன் காரணமாக அது வலுவிழக்கவில்லை. உலகத்தில் உயர் பதவிகளில் இருந்த அதாவது பின்லாந்து ஐனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சர்வதேச விசாரணை முடிந்து அந்த விசாரணையினுடைய அறிக்கை 2015 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி nஐனிவாவில் இளவரசர் செயிட்டினால் வெளியிடப்பட்டது.

ஆகவே இலங்கை எதிர்த்ததன் காரமாக அந்தத் தீர்மானங்களில் ஒரு தீர்மானமும் வலுவிழக்கிவ்லலை. ஆனபடியானல் ஐயா சொன்னதைப் போல இலங்கை அத் தீர்மானத்திலிருந்த விலகலாம். ஆவர்கள் இனி நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் சொல்லலாம். விலகுகிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒத்துழைக்காமல் விடலாம்.

ஏனென்றால் இந்த மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள் எதுவும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. ஆகவே கட்டுப்படுத்தாத தீர்மானங்களில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்லிவட்டால் போதும்.

ஆனால் அவர்கள் விலகுகிறோம் என்று சொல்லுவதற்கான காரணம் என்னவென்றால் சிங்கள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலில் தங்களை பெரிய வீரர்களாகக் காட்டிக் கொள்வதற்கு தான். அதாவது சர்வதேச சமூகத்தினுடைய தீர்மானத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை. நாங்கள் எங்களுடைய நாட்டு விவகாரங்களை நாங்களே கையாளுவோம். இந்த விடயத்தில் பழைய அரசாங்கம் தவறான முடிவை எடுத்தது. ஆனால் நாங்கள் அதிலிருந்த விலகுகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

அவ்வாறு விலகுகிறோம் என்று சொல்வதற்கு அர்த்தம் கிடையாது. ஆனால் இப்படி இவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தோம். ஆனபடியினால் தான் இந்த தடவை நான் nஐனிவாவிற்குச் சென்ற போது பெப்ரவரி 14 ஆம் திகதி nஐனிவாவிலே உறுப்பு நாடுகளோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலே நான் இந்த விடயத்தைச் சொல்லியிரந்தேன்.

இப்படியாக வெளிவிவகார அமைச்சர் ஆரம்ப கட்டத்திலே வந்த பேசுவார்கள். அதிலே ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வந்த எதனையும் பேசலாம். அதைப்பற்றி ஒர விவாதம் நடக்காது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை உபயோகித்து தினேஸ் குணவர்த்தன அவர்கள் nஐனினாவில் அறிவிப்பை செய்து விட்டுப் போகிறதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றது என நான் ஏற்கனவே அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறேன்.

அப்படிச் செய்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதைப் பற்றி கலந்துரையாடல்கள் நடந்திருக்கிறது. உங்கள் எல்லாருக்கும் தெரிந்தபடி கடந்த மூன்று நான்கு வருடங்கள் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்ட வாரங்கள் முன்னரே நான் nஐனிவாவிற:குப் போவது வழக்கம். ஏனென்றால் அந்த உறுப்பு நாடுகள் என்னை அழைப்பார்கள். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே கலந்தாலோசனைகள் நடந்தால் தான் அவர்கள் தங்களுடைய தலைநகரங்களோடு ஆலோசனை செய்த இது சம்மந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். கூட்டத் தொடர் தொடங்கிய பின்னர் அவர்கள் தீர்மானிக்க முடியாது.

ஆகவே இந்தத் தடவையும் பிரித்தானியாவும் கனடாவும் என்னை அழைத்திருந்தனர். இதற்கமைய நான் முதலிலே கனடாவிற்குச் சென்று வெளிவிவகார அமைச்சிலே சில பேச்சுவார்த்தைகளை நடாத்தி அதுக்குப் பிறகு பிரித்தானியாவிற்கு வந்த இலண்டனிலே வெளியுறவுத்துறை அமைச்சிலெ சில பேச்சுவார்த்தைகளை நடாத்தி இறுதியாக nஐனிவாவிலே இரண்டு நாடகளும் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டத்திலும் மற்றைய உறுப்பு நாடுகளும் அழைக்கப்பட்டிருந்த அந்தக் கூட்டத்திலும் கலந்த கொண்டு அவர்களோடு நாங்கள் ஒரு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்.

இலங்கை அப்படியாக நாங்கள் விலகுகிறோம் என்று சொன்னால் அல்லது ஒத்துழைக்க மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள் அப்படியாகச் சொன்னால் இந்தத் தீர்மானத்தினுடைய உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டிருக்கின்றொம். விசேசமாக சிங்கள மக்களுக்கு விளங்கத்தக்கதாக அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். தீர்மானம் இருக்கிறது. தீர்மானத்தில் இருக்கிற கூறுகள் இருக்கின்றன. அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலெ சர்வதேச சமூகத்திற்கு மாற்றுக் கருத்தில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டிருக்கின்றொம்.

இந்தத் தடவை இந்தத் தீர்மானத்தினுடைய இறுதிக் கட்டம் அல்ல. இது அரைவாசித் தூரத்திற்கு வந்திருக்கிறது. 40.1 என்கின்ற இந்த தீர்மானம் சம்மந்தன் ஐயா சொன்னதைப் போல பங்குனி 2021 வரைக்கும் செல்லும். ஒரு வருட காலத்திற்குள்ளே ஒரு வாய்மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வழங்குவார்.

ஆந்த அறிக்கை வருகின்ற பொழுத அது சம்மந்தமான கலந்தரையாடல் மிகவும் சொற்ப நேரத்தில் தான் நடைபெறும். பல நாடுகளைப் பற்றிப் பேசுகிற பொழத இலங்கை சம்மந்தமாகவும் ஒரு ஐந்த நிமிடம் அல்லது பத்த நிமிடம் தான் அந்தக் கலந்துரையாடல் நடக்கும். அதில் இலங்கைக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக் கொடப்பார்கள். மற்றவர்களுக்கு பேசுவதற்கு நேரம் இருக்காது என்கின்ற ஒரு பிரச்சனை இருந்தது.

அதனாலே இந்த இலங்கை சம்மந்தமான தீர்மானத்திற்குப் பின்னால் ஐந்த நாடுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் பல நாடுகள் சேர்ந்து இயங்கினாலும் இதை முன்னெடுத்துச் செல்கிறதாக ஐந்து நாடுகள் தான் இருக்கிறார்கள். முன்னர் அமெரிக்கா அதிலே இரந்தது. ஆனால் பெரவையில் இருந்த அமெரிக்கா விலகிய பிற்பாடு பிரித்தானியா அதற்கு தலைமை தாங்குகிறது. குனடா மசிகோனியா மொன்றிக்கொ ஐரோப்பி ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி Nஐர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் சேர்ந்து எழுத்துமூலமான ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

ஏனென்றால் அங்கெ வாய்மூலமாக சொல்வதற்கு நேரம் போதாமல் இருந்தால் தங்களுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே தயாரித்து ஒரு அறிக்கை கொடப்பதாகச் சொல்லியிரக்கிறார்கள். அதை அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறொம். தொடர்பிலே இருக்கிறோம்.

விசெடமாக இந்த நாட்டிலே தேர்தலிலே சிங்கள மக்கள் மத்தியில் தங்களை வீரர்களாகக் காட்டிக் கொள்வதற்காக செய்யப்படுகிற இந்த முனைப்பைக் குறித்து சர்வதேச சமூகம் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட நாடு இந்தத் தீர்மானத்திலே அவர்கள் பொறுப்பெடுத்தக் கொண்ட விடயங்களை செய்யாமல் ஒத்துழைக்காமல் விட்டால் அடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி இருக்கிறது.

இது எங்களுடைய மக்கள் மத்தியிலும் பெரிய ஆதங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு கால அவகாசம் என்று கேட்ட போது நாங்கள் இன்னொரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதற:கு ஆதரவைக் கொடுத்தோம். ஏனென்று சொன்னால் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இந்த விடயங்களைக் குறித்தச் செயற்படுவதற்கு எந்த ஆணையும் இருக்காது. எந்த தகுதியும் இருக்காது. அது 30.1 தீர்மானம் 2017 மார்ச்சோடு முடிவடைந்திருக்கும். அதற:குப் பிறகு சர்வதேச மேற்பார்வையே இருந்திருக்காது.

ஆகவே சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு தடவையும் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு நாங்கள் ஆதரவை கொடுத்தோம். அது தேவையாகவும் இருந்தது. இல்லையென்றால் இந்த மேற்பார்வை இருந்திருக்காது. ஆனால் இனிமேல் புதிய அரசாங்கம் இதோடு நாங்கள் ஒத்துழைக்கவே மாட்டோம் என்று வெளிப்படையாகவே சொல்லுகிற பொழுது அந்த மேற்பார்வை என்பது இந்தத் தீர்மானம் சம்மந்தமாக இருப்பதில் அர்த்தமில்லை. ஆகையினாலே மாற்று வழிகள் சம்மந்தமாக நாங்கள் பேசியிருக்கிறொம்.

ஏற்கனவே பழைய அரசாங்கம் கூட பல விடயங்களில் இழுத்தடித்த காரத்தினாலே நாங்களும் அதற்கு பல முறைப்பாடுகள் கொடுத்த காரணத்தினாலே இளவரசர் செயிட் உயர்ஸ்தானிகராக இருக்கிற பொழுதே சில மாற்று வழிகளை அவர் பிரேரித்திருக்கிறார். அதிலே ஒரு மாற்று வழி தான் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்பு நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதை அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே பிரேதித்திருந்தார். அதைத் தான் இப்பொழுது அமெரிக்கா செய்திருக்கிறது. இரானுவத் தளபதி சவேந்திரசில்வா சம்மந்தமாக ஒரு பயணத் தடையை அவர்கள் அமுல்ப்படுத்துவது தங்களுடைய உலகளாவிய நியாயாதிக்கத்தை அவர்கள் பயன்படுத்தகிறார்கள். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பெரவையிலே உயர்ஸ்தானிகர் சில வருடங்களுக்கு மன்னர் சொன்ன ஒரு மாற்றுவழி.

ஆமெரிக்க சார்பு நாடுகள் இதைப் பின்தொடர்ந்து தாங்களும் தங்களுடைய நாடுகளிலெ பயணத் தடைகளைக் கொண்ட வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களுடைய நாடுகளிலே அந்தச் சட்டங்கள் இருக்கின்றன. ஆகவே ஒருவருக்கு மட்டுமல்ல பலருக்கு எதிராக கொண்டு வருவரலாம். இதைக் குறித்து இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

ஏனென்றால் அவர்கள் தங்களுடைய நாட்டுச் சட்டத்தின்படி உலகத்தில் எந்தப் பகுதியில் என்றாலும் சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரையில் குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் உள்ளவர்கள் எங்களுடைய நாட்டிற்கு வர முடியாது என்ற சட்டம் இருக்கிறது.

ஆகவே அவர்கள் தங்கள் நாட்டச் சட்டத்தின் பிரகாரம் இப்படியானவர்கள் எங்கள் நாட்டிற்கு வர மடியாது என்று சொல்லுவது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆதைப் போல வேறு பல மாற்று வழிகளைக் குறித்தும் நாங்கள் பேசியிரக்கிறொம். அவற்றை விவரமாக பகிரங்கமாக நான் இப்பொழுது சொல்வில்லை. ஆனால் இலங்கையை இந்தப் பொறுப்புக்கு அதாவது சம்மந்தன் ஐயா சொன்ன 2009 ஆம் ஆண்ட மே மாதம் 23 ஆம் திகதி கண்டியில் வைத்த மகிந்த ராஐபச்வும் பான்கீமூனும் செய்த ஒப்பந்தம் இது தான்(அந்த அறிக்கையை காட்டுகிறார்). இதில் அவர் சில பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான குற்றங்கள் சம்மந்தமாக நான் விசாரணை நடாத்துவேன் என்று சொல்லியிரக்கின்றார். அவ்வாறு எடுத்தக் கொண்ட பொறுப்பை இப்பொழுது 11 வருடங்கள் ஆகின்ற நிலைமையிலும் அதனை இலங்கை செய்யவில்லை. அதைச் செய்யாமல் விடகிற பொழுது சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை அவர்கள் இப்படியாகக் கைவிடுகிற பொழுது சர்வதேச மட்டத்திலே சில வழிபளன் இருக்கின்றன. சில பொறிமுறைகள் இரக்கின்றன. அது ஒரு நாட்டிலே இருக்கின்ற சட்டத்தைப் போல உடனடியாக அமுல்ப்படுத்தக் கூடிய பொறிமுறையாக இருக்காது.

ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிற்கும் சுயாதினம் இருக்கிறது. அவர்களுக்குரிய சுதந்திரம் இருக்கிறது. ஆகையினாலே அதைக் கட்டுப்படுத்துகிற தீர்மானங்களைக் கொண்ட வருவது கஸ்ரம். ஆனாலும் சர்வதேசத்திற்கு பலவிதமான வேறு வழிகள் மூலமாக அழுத்தங்கள் மூலமாக நடைமுறைப்படுத்ததுவற்கான ஆயுதங்கள் அவர்களது கைகளிலே இருக்கிறது. அந்த ஆயுதங்கள் சிலவற்றை மாற்று வழிகளாக உபயோகிப்பதற்கு எங்களோடு பெச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார்கள்.

அதை உடனடியாக செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கை அரசாங்கம் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காகவும் சிங்கள மக்கள் மத்தியிலே தாங்கள் பிரபல்யம் அடைவதற்காகவும் செய்கிற இந்தச் செயற்பாடு நாட்டிற்கு ஒரு அவப் பெயரைத் தான் கொண்டு வரும். சுர்வதேச பொறுப்புக் கூறல் என்று சொல்லுவது இந்தத் தீர்மானங்களில் இருந்து மட்டும் எழுகிறவை அல்ல.

இந்த 30.1 34.1  40.1 ஆகிய தீர்மானங்களில் இருந்த மட்டும் எழுகிறவை அல்ல. இவை சர்வதேச நியமங்கள் என்று பல இருக்கின்றன. அந்த சர்வதேச நியமங்களிலே இலங்கைக்கு பல பொறுப்புக்கள் இருக்கின்றன. அது ஏற்கவே உறுதியாக உலகத்திலே நிர்மாணிக்கப்பட்டவை. ஆகவே அவற்றிலிருந்தும் இலங்கை விலகுகிறது. ஆப்படியாக விலகுகிற பொழுது பல பின் விளைவுகள் நாட்டிற்கு ஏற்படும். சிங்கள மக்களுக்கும் பாதிப்பாகத் தான் அது இருக்கும்.

ஒரு மாற்று வழியாக நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடையைக் கொண்ட வருவது. ஆப்படியாக பொருளாதாரத் தடை வருமாக இருந்தால் அது எல்லாரையும் பாதிக்கும். ஆகவெ சிங்கள மக்களுக்கு இந்த விடயங்கள் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். சர்வதேசத்திலே சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நாங்கள் செயற்படுவதன் முக்கியத்துவம் என்னவென்பது தெரிந்திருக்க வேண்டும்.

வெறுமனெ இது நாட்டிற்கு எதிரானது எங்களுடைய சுயாதீனத்திற்கு எதிரானது என்று சொல்லி சிங்கள மக்களை பிழையான வழியிலே அரசாங்கம் கொண்டு செல்கின்ற செய்தியையும் சிங்கள மக்கள் மத்தியிலே நாங்கள் சொல்லவும் வேண்டும். இந்தத் தடவை nஐனிவாவிலே வெளியுறவுத் துறை அமைச்சர் இப்படியாக நாங்கள் விலகுகிறொம் என்று சொல்லுவது இந்த நாட்டிற்கு ஒரு பெரிய கேடை கொண்டு வரும் என்றார்.

 இவ்வாறு சுமந்திரன் தெரிவித்திருந்த பின்னர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் மாவை சேனாதிராசா சுமந்திரகுக்கு சில கருத்தக்களைச் சொல்லியிரந்தார். அதனையடுத்து மிண்டும் பேசிய சுமந்திரன் சர்வதேசத்திடம் ஆயுதங்கள் இருப்பதாக கூறியிரந்தேன். அது ஆயுதம் என்றில்லை. சர்வதேசத்திடம் சில பொறமுறைகள் அல்லது கருவிகள் இருக்கிறிது என்று தான் கூறுகிறென். கருவிகள் என்றதைத் தான் ஆயுதங்கள் என்றுவிட்டேன் என்றார்.

இதன் பின் பேசிய சம்மந்தன்

இன்றைக்கு இலங்கை அரசாங்கம் இந்தப் பிரேரனையில் இருந்து விலகுவதாகக் கூறியிரக்கின்றார்கள். மிக விரைவில் வெளிவிவகார அமைச்சர் அங்கே சென்று இந்தக் கருத்தைக் கூற இரப்பதாக நாங்கள் அறிகின்றோம். அவர்கள் பகிரங்கமாக இதனைக் கூறுகின்ற காரணம் என்னவென்றால் இந்தப் பிரேரனை யுத்தத்தை நடாத்திய தமது போர் வீரர்களுக்கு அதாவது இரானுவ வீரர்களுக்கு ஒரு அவமானம், அவர்கள் இந்த தேசத்தைப் பாதுகாப்பதற்காக போரை நடாத்தினார்கள். விசெசமாக பெரும்பான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போரை நடாத்தினார்கள் அவ்விதமான வீரர்களுக்கு இவ்விதமான இடைஞ்சல் ஏற்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் காரணத்தின் நிமித்தம் தான் நாங்கள் விலகுகிறொம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

அது அவர்களு;ககு தேர்தலுக்கும் உதவியாக இருக்கும். தேர்தலில் தாங்கள் தான் பெரும்பான்மையான மக்கள் சார்பாக ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறுவதற்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவ்விதமாக விலகுவதன் மூலமாக அந்த பிரேரனையை நீங்கள் வலுவிழக்கச் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு முக்கியமான காரணம் போர் நடந்த பொழுது போர் நடந்த விதம் சம்மந்தமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இரானுவ வீரர்கள் மாத்திரமல்ல.

அவர்களையும் பார்க்க கூடுதலாகப் பொறுப்புக் கூறக் கூடியவர்கள் ஐனாதிபதி. ஆவர் தான் நாட்டின் இரர்னுவத்தின் கட்டளைத் தளபதி. பாதுகாப்பு அமைச்சர் என அவ்விதமாக பலர் சம்மந்தப்படுகின்றனர். தனியெ யுத்தத்தில் ஈடுபட்ட இரானுவ வீரர்கள் மாத்திரமல்ல. அவர்களையும் பார்க்க மேலதிகமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அவ்விதமான பதவியில் இரந்தவர்கள். யுத்தத்தை வழிநடத்தியவர்கள். யுத்தத்தின் போது பல விதமான கட்டளைகளை ஏற்படுத்தியவர்கள். யுத்தத்தின் போது எந்தவிதமாக யுத்தம் நடைபெற வேண்டும் என தீர்மானித்தவர்கள்
.யுத்தம் நடந்த போது பாதுகாப்பு வலயங்கள் என்று சொல்லப்பட்ட சில பிரதேசங்களுக்கு பொது மக்களை போகச் சொன்னார்கள். அவ்விதமாக மக்களும் போனார்கள். ஆனால் அந்த இடங்கள் தாக்கப்பட்டன. பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அந்த யுத்தப் பிரதேசத்தில் அறுபதினாயிரம் மக்கள் இருப்பதாகக் கூறினார்கள். வெளியில் வந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து தொன்னூறு ஆயிரம். அறுபது ஆயிரம் மக்கள் தான் அங்கு இருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறியது. ஆனால் 290 000 மக்கள் வெளியில் வந்தார்கள்.

ஆக அறுபதினாயிரம் மக்கள் என்று சொல்லிக் கொண்ட உணவு மருந்த அனுப்பியது அறுபதினாயிரம் மக்களுக்கு தான். எப்படி அந்த மருந்து உணவுகளை இரண்டு இலட்சத்து தொன்னூறு ஆயிரம் மக்களும் பாவிப்பது. ஏங்களுடைய கணிப்பின் படி அந்தப் பிரதேசத்தில் அந்தக் காலத்தில் குறைந்தது மூன்றரை இலட்சம் மக்கள் இருந்தாரக்ள். இந்த விடயங்கள் சம்மந்தமாக பாராளுமன்றத்தில் அந்தத்த நேரங்களில் நாங்கள் பேசியிரக்கின்றொம். யுத்த காலத்தில் நடைபெற்ற அத்தனை விடயங்களையும் நாங்கள் அந்த நேரங்களிலேயே பேசியிரக்கின்றொம்.

மருந்து லொறிகள் உணவு லொறிகள் திரப்பி அனுப்பபட்டன. மக்கள் வாழ்வதற்காக அனுப்பட்ட வீட்டப் பொருட்கள் அதாவது தற்காலிக வீடகள் கட்டவதற்குத் தேவையான பொருட்கள் திரப்பி அனுப்பபட்டன. மக்களுக்கு அந்த உதவிகளைச் செய்யக் கூடாது என அரசாங்கம் எல்லாவற்றையும் தடுத்திருந்தது. சுரக்கமாகச் சொல்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளுக்கு மாறாக நடந்த யுத்தம் என்று அரசாங்கம் கூறினபொழுதும் கூட இது தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி உரிமைகள் கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருங்கோ என்ற நோக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டதே இந்த யுத்தம்.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பது அவர்களை புகழ்வது ஒரு காரணமாக இருந்தாலும் கூட அதோடு தமிழ் மக்கள் இந்த விடயம் சம்மந்தமாக மேலதிகமாக பிரச்சனைகள கிளப்பாமல் இரப்பதற்காக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்காக முன்னெடுக்கப்பட்ட யுத்தம். ஆனபடியால் இந்த விடயங்கள் சம்மந்தமாக இந்தக் கரமங்களை நாங்கள் வெளிக் கொணர வேண்டிய கடமை இருக்கிறது. அதை நாங்கள் செய்வோம்.

ஆனால் அதை நாங்கள் சிங்கள மக்களுக்கு மாறாகச் செய்யவில்லை. இரர்னுவத்திற்கு மாறாகச் செய்யவில்லை. சிங்களம் தமிழ் என்று இல்லை. மனித உரிமைகள் மீறப்பட்டன. சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டன. சிவிலயன் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உண்மையை அறிய வேண்டும். அது எங்களுடைய பொறுப்பு. கடமை. அதிலிருந்த எவரும் விலக முடியாது.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா

இந்த இடத்தில் ஒரு விடயத்தைச்; சொல்ல வேணும். அந்தக் காலத்தில் நாங்கள் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கின்றார்கள். ஆனால் பல நடடிவடிக்கைளை எடுத்தோம்.
அத்தோடு ராஐபக்சவின் வரவு செலவுத் திட்ட அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு உண்ணாவிரதம் செய்தோம். அதைப்பொல பலமுறை செய்திருக்கிறோம். அதாவது போரை நிறுத்த வேண்டும் அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்த அனுப்ப வேண்டுமென்று கோரியிருந்தோம். அதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும:புகிறென்.

கேள்வி – சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக நீங்கள் கூறுகின்ற நிலையில் அது முடியிவில்லை என்று தமிழ்த் தரப்பு கட்சிகளே சொல்கின்றனரே என எழுப்பிய கௌ;விக்கு சுமந்திரன் பதிலளிக்கையில்..

நான் சொன்னது போல சர்வதேச விசாரணை என்பது 2014 ஆம் ஆண்டு தீர்மானத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அந்த ஆணை கொடக்கப்பட்டது. இன்றைக்கு விசாரணை மடியவில்லை என்று சொல்கின்றவர்கள்  அந்த வேளையிலையே சர்வதேச விசாரணை அந்த தீர்மானத்தில் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் சமந்மந்தன் ஐயாவிடம் பிபிசி தமிழ் சேவை ஒரு பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியிலே nஐனிவாத் தீர்மானத்திலெ சர்வதேச விசாரணை இருக்கிறதா என்று கேட்டார்கள். அத்தோடு அவ்வாறு சர்வதேச விசாரணை இல்லை என்றும் சொல்லுகிறார்களோ நிங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு இந்த விசாரணையை நடாத்தப் போது யார் என்று திருப்பி சம்மந்தன் ஐயா ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தான் என்று அவர் சொன்னார்.

இதன் பின் அது என்ன உள்ளக விசாரணையா உள்நாட்டு விசாரணையா என ஐயா மிண்டும் கேட்டார். அதோடு அந்தக் கேள்வி பதில் முடிந்துவிட்டது.
ஆகவே அது முழுமையான ஒரு சர்வதேச விசாரணை. ஆதில் உள்நாட்டு சின்னக் கூறு கூட இரக்கவில்லை. நான் ஏற்கனவே சொன்ன ஆட்கள் எல்லாம் அதற்கு மேற்பார்வை செய்தவர்கள். அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவர இருந்த பொழுது புதுpதாக வந்த அரசாங்கம் அந்த அறிகையை தாமதிக்கும்படி கேட்டார்கள்.

அதற்கான நியாயங்களைச் சொன்ன போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் அதற்கு இணங்கியது. அந்த வேளையில் இப்படிக் கருத்தக்களைச் சொல்பவர்கள் தாமதிக்க விடக் கூடாது என்று சொன்னார்கள். அது உடனடியாக வெளிவர வேண்டுமென்று ஒரே பிடியாக நின்றார்கள். அது தாமதிக்கப்பட்டு செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி nஐனிவாவில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது கறுப்பும் வெள்ளையுமாக எழுத்தில் இருக்கிறது. அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டும் இருக்கிறது. முழுமையான சர்வதேச விசாரணை அறிக்கையொன்று இருக்கிற போது சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று சொல்லுவது எங்களுக்கு எதிரான ஒரு கூற்று. மிக முக்கியமான ஒரு அறிக்கை. அதாவது மனித உரிமைகள் மிறல்கள் நடந்தது.

சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டது என்று சர்வதேச நிபுணர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்ற போது அது இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது யாருக்கு சார்பான கூற்று. அது அரசாங்கத்திற்குச் சார்ப்hன கூற்று தான். இரானுவத்திற்கு சார்பான கூற்று. அதைத் தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த விசாரணை முடிவடைந்தது. அதன் அறிக்கை வந்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான நீதிமன்றப் பொறிமுறை நடக்க வேண்டும். அது வேற விசயம். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே இந்த இரண்டையும் குழப்பி யார் தண்டிக்கப்பட்டார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்கின்றார்கள்.

 நீதிமன்றப் பொறிமுறை மூலமாக ஒருவர் தண்டிக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது அந்த நாட்டு சட்டத்திற்குள்ளேயே உள்வாங்கப்பட வேண்டும். இல்லையென்று சொன்னால் ஒருவரும் தண்டிக்கப்பட முடியாது. ஆனபடியினால் தான் இந்தக் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை என்பது இந்தத் தீர்மானத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

சர்வதேச பங்களிப்பொடு உள்நாட்டுக்குள்ளெயெ அந்த நீதிமன்றப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்று இந்த இணை அனுசரனை கொடுத்த தீர்மானங்களில் இருக்கிறது. அதற்கு இலங்கை அரசாங்கம் இப்போது இணங்காமல் இருக்கலாம். ஆனால் சர்வதேச விசாரணை என்பது முடிந்தது. முழுமையான அறிக்கை இருக்கிறது. அதற்கு அடுத்ததாக வர வேண்டிய நீதிமன்றப் பொறிமுறை இன்னமும் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பொடு அதைச் செய்வதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அந்த சர்வதேச விசாரணை நடந்த போது அந்த விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கேட்டவர்கள். இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்தது. ஏnனினல் இங்கு சாட்சியங்கள் எடுத்துவிடுவார்கள் என்பதற்காகவே அரசாங்கம் மறுத்திருந்தது. ஆனால் இங்கெ இருக்கிறவர்களின் சாட்சியங்கள் பதீவு செய்யப்பட்டு அந்த விசாரணைக்கு கொடக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்த தான் அவர்கள் தீர்மானம் எடுத்திரக்கிறார்கள்.

கேள்வி – நீதிமன்றப் பொறிமுறை அரசினூடாகவே நடக்குமென்று நீங்கள் கூறுகின்ற நிலையில் இணை அனுசரணை வழங்கியெ அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்காத நிலையில் இணை அனுசரணையில் இரந்த அரசாங்கம் விலகுகின்ற நிலையில் அந்தப் பொறிமுறை எவ்வாறு நடக்குமன எதிர்பார்க்க முடியும்
நுடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இலங்கை அதற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறது. அவ்வாறு ஏற்காவிட்டாலும் கூட நான் முதலே சொன்னது போல சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது.

இலங்கை புறக்கணிக்கிறதால் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று நான் எதிர்வு சொல்லவும் முடியாது. ஆனால் அதற்கான பின் விளைவுகள் இருக்கிறது. பல அறிக்கைகள் இருக்கிறது. அதில் சிலதில் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கைகள் இரண்டில் வெளிப்படையாக சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறதென்பது சொல்லப்பட்டிருக்கிறது.

அதற்கான தண்டணைப் பொறிமுறை செய்யப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசாங்கம் செய்யாமல் இருந்தால் அதற்கான பின் விளைவுகள் இருக்கிறது. விசேசமாக இந்த அரசாங்கம் வந்த பின்னர் அது நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

குடந்த அரசாங்கமே இணை அனுசரனை கொடத்தும் நீதிமன்றப் பொறிமுறைக்கு மறுப்பு தெரிவித்திருந்தது. தில் ஒரு பிரச்சனையும் இரக்கிறது. ஆனாலும் இவ்வளவு தூரட் நாங்கள் வந்திருக்கிறொம். இன்னும் கொஞ்ச தூரம் நாங்கள் போவொம். ஏனெனில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக இருக்கும்.

இதன் பின்னர் கருத்த வெளியிட்ட சம்மந்தன்

யுத்தம் நடைபெற்ற போது என்ன நடைபெற்றது என்பது விடயம் சம்மந்தமாக உண்மை வெளி வர வேண்டும். பிரேரனை நிறைவேற்றப்பட்டது அதனை அடைவதற்காகத் தான். இலங்கை விலகுகின்ற காரணத்தின் நிமித்தம் அந்தப் பிரேரனை அர்த்தமற்றதாகப் போக முடியாது. சர்வதேச சமூகத்திற்கும் கடமை இருக்கிறது.

அதாவது யுத்தம் நடைபெற்ற போது என்ன நடந்தது பொறுப்புக் கூற வேண்டிய கடமை சர்வதேசத்திற்கு இருந்தால் அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மன்னெடுக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்ற விடயம் சம்மந்தமாக சர்வதேசம் ஒரு தீர்மானம் எடுத்து அந்த உண்மையை வெளிக் கெனாணர வேண்டுமென்ற பொறுப்பு உள்ளது. அதில் நாங்கள் விலக மாட்டோம்

 கேள்வி – இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியுமா என எழுப்பப்ட்ட கௌ;விக்கு பதிலளித்த சுமந்திரன்

சுர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு போவதற்கு இரண்டே இரண்டு வழி தான் இருக்கிறது. அதில் முதலாவது ரோம் சட்டத்திற்கு அந்த நாடு இணங்கியிருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த இரண்டுக்கும் மாறான வேறு வழிகள் இப்பொதைக்கு இல்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கம் ரோம் சட்டத்திற்கு கைச்சாத்திடவில்லை.

கேள்வி – மியன்மார் விடயத்திலும் இந்த நிலைமைகள் இருக்கத்தக்கதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறதே

முpயன்மார் விடயத்தில் நடந்த விசயம் சம்மந்தமாக இந்த தடவை என்னுடைய விஐயத்தில் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் பேசியிரக்கிறொம். ஆகவே அது குறித்தான எல்லா விசயத்தையும் இங்கு நான் சொல்ல விருமப்பவில்லை இவ்வாறு சுமந்திரன் பதிலளித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post