கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வவுனியாவைச் சேர்ந்த பெண்னொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வவுனியாவைச் சேர்ந்த பெண்னொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice

கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வவுனியாவைச் சேர்ந்த பெண்னொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது உள்ளதாகவும் எனினும் பெண்மணிக்கு பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை எனவும் எனினும் அவருடைய இரத்த மாதிரி சோதனை பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இல்லையா என்பது பற்றி தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜமுனாநந்தா தெரிவித்தார்.

 இது தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பில் தாங்கள் பூரண சிகிச்சை அளித்து வருவதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் குறித்த அனுமதிக்கப்பட்ட பெண்மணி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post