தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு யாழில் இடம்பெற்றது - படங்கள் - Yarl Voice தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு யாழில் இடம்பெற்றது - படங்கள் - Yarl Voice

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு யாழில் இடம்பெற்றது - படங்கள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ் - மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு இன்று ஞாயிற்றுக் கிழமை (01.03.2020)  வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர் திரு சன் தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ஜெனிவா-உண்மைகளும் மாயைகளும் என்ற தலைப்பில் அரசியல் கருத்தியலாளர்  நிலாந்தன் அவர்களும், ஊடகங்கள் சொல்லும் அரசியலைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம்; அவர்களும், வழிவரைபடம் இல்லாத தமிழ்த் தேசிய அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர். வி.எஸ். சிவகரன் அவர்களும் உரையாற்றினார்கள்.

இவர்களுடன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் . பொ. ஐங்கரநேசன் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக  உரையாற்றி இருந்தார்.
இவ்வுரையரங்கில் வீரசிங்கம் மண்டபம் கொள்ளாத அளவுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











0/Post a Comment/Comments

Previous Post Next Post