ராஐபக்சாக்களுக்கும் கூட்டமைப்பிற்கும் டீல் - ஏமாற்றுத் வித்தையை புரிந்து கொள்ளுங்கள் - விக்கி - Yarl Voice ராஐபக்சாக்களுக்கும் கூட்டமைப்பிற்கும் டீல் - ஏமாற்றுத் வித்தையை புரிந்து கொள்ளுங்கள் - விக்கி - Yarl Voice

ராஐபக்சாக்களுக்கும் கூட்டமைப்பிற்கும் டீல் - ஏமாற்றுத் வித்தையை புரிந்து கொள்ளுங்கள் - விக்கி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உள்ளது என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான .வி.விக்னேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளை ராஜபக்சக்களுக்கு பெற்றுக் கொடுக்கவும், தமிழ் மக்களின் வாக்குகளை ஏமாற்றி தாம் பெற்றுக் கொள்வதற்குமாகவே இரு தரப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் அண்மைக்காலமாக மாறி மாறி காட்டாமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்இவற்றை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிட கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாக காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பை பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றி கூட்டமைப்பும் மாறிமாறி கருத்து தெரிவிப்பது, இரகசிய உடன்படிக்கையின் கீழேயே. இப்படி பேசினால் தெற்கில் அவர்கள் வாக்கு பெறலாம். அதேவேளை, வடக்கில் அவர்கள் விரும்பும் கூட்டமைப்பினர் வெற்றியடையலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டுமென ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு காரணமுள்ளது. எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச பொறியில் சிக்குவதற்காக வாய்ப்புள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச பொறியிலிருந்த தப்பிக்க, தமிழ் தேசிய கூட்டமைப்ப உதவியதை போல, எதிர்காலத்தின் மஹிந்த ராஜபக்சவும், அவரது கட்சியினரும் பெற்றுக்கொள்ள விரும்புவதை போல தெரிகிறது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், பொருளாதார தடைகள், பயணத்தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் எப்படி இலங்கையை பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பில்லாமல் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து நல்லாட்சி அரசு தப்பித்திருக்கவே முடியாது. எனவெ, ராஜபக்ச அரசும் சர்வதேச நெருக்கடியிருந்து தப்ப, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி அவசியமாக உள்ளது.
சலுகைகளிற்கு விலைபோகக்கூடிய இவர்களை பயன்படுத்தி, சிங்கள பௌத்த விஸ்தரிப்பை மேற்கொள்ளலாமென்றும் அரசு கருதலாம்.

வெளிப்படையாக இரண்டு தரப்பும் மோதிக்கொள்வதை போல கருத்த சொன்னாலும், இரண்டு தரப்பும் இரகசிய தொடர்பில் உள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 2 தடவைகள் ஆதரவு கோரி ராஜபக்சக்கள் என்னை தொடர்பு கொண்டனர். நான் கொடுத்த பதிலின் மூலம் அவர்கள் என்னை அறிந்திருப்பார்கள்.

அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து, கோட்டாபய அரசாங்கம் செயற்படவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சு பதவியை கொடுத்து தம்முடன் வைத்திருக்க பெரமுன விரும்புகிறது. அதன் எதிரொலிதான் அண்மையில் அமைச்சு பதவியை பற்றி சுமந்திரன் தெரிவித்தது.

ஒரு பக்கத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசிக்கொண்டு, அரசின் போர்க்குற்றங்கள்பற்றி பேசிக்கொண்டு, எப்படி அமைச்சு பதவியை பெறுவது? இரண்டையும் செய்ய முடியாது. அமைச்சு பதவி ஆசையிருந்தால் .தே.கவில் போட்டியிடுங்கள். இங்கிருந்தபடி இரண்டையும் செய்ய முடியாது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post