நிவர் புயல்: மழை வெள்ளத்தால் பருத்தித்துறையில் 11 வீடுகள் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழை வெள்ளத்தால் பருத்தித்துறையில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதிகாலை 5.00 மணி வரையான 24 மணி நேரத்தில் வட மாகாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 103 மி.லீட்டர் மழைப் பொழிவு பருத்தித்துறையில் ஏற்பட்டிருந்தது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் தற்காலிக குடிசைகளுக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவின் யா/404 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கலப்பனாவத்தை, தும்பளையில் 11 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.