யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்களை சேர்ந்த 1138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதமும் 140 வீடுகள் பகுதியளவிலும், சேதம் ஏற்பட்டுள்ள அதே வேளை இதுவரை 3 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment