யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்




நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 82  குடும்பங்களைச்சேர்ந்த 359 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்களது வீட்டில் தங்கியுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 யாழ் – சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதையடுத்து குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா மேலும் அறிவித்துள்ளார்.
 
அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post