பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு - கிழக்கு தாயகம் முழுவதுமாக ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான
மரபுவழித் தாயகம்
சுயநிர்ணய உரிமை
தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம்.
Post a Comment