இலங்கையில் மேலும் 3306 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 191,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160,714 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்று முன்தினம் தினம் பதிவு செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment