எரிபொருள் பௌசர்களைத் தடுக்கவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம் -பொலிஸார் - Yarl Voice எரிபொருள் பௌசர்களைத் தடுக்கவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம் -பொலிஸார் - Yarl Voice

எரிபொருள் பௌசர்களைத் தடுக்கவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம் -பொலிஸார்



எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ளு மாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது தொடர்வதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பல்வேறு குழுக்களால் நேற்று பல எரிபொருள் பௌசர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோக பொறிமுறை சீர்குலைந்தால் அது மருந்து, உணவு மற்றும் இதர பொருட்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே பொதுமக்கள் எரிபொருள் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணிகளை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post