அன்று 13 ஜ அமுலாக்க விடாமல் தடுத்தது தமிழர் தரப்பே! இன்று கெஞ்சுவது வேடிக்கை என டக்ளஸ் குற்றச்சாட்டு - Yarl Voice அன்று 13 ஜ அமுலாக்க விடாமல் தடுத்தது தமிழர் தரப்பே! இன்று கெஞ்சுவது வேடிக்கை என டக்ளஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

அன்று 13 ஜ அமுலாக்க விடாமல் தடுத்தது தமிழர் தரப்பே! இன்று கெஞ்சுவது வேடிக்கை என டக்ளஸ் குற்றச்சாட்டு




இவ்வாறு ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்..

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து சென்றிருக்கின்றனர். அவர்கள் வந்து என்ன பேசியிருக்கின்றர் என்பதும் ஏனைய தமிழ்க் கட்சியினர் என்ன கேட்டிருக்கின்றனர் என்பதும் உங்களுக்கு தெரியும்.

குறிப்பாக இங்குள்ள தமிழ்க் கட்சியினர் அவர்களிடத்தே காவாசி தாறியா, அரைவாசி தாறியா, முக்கால்வாசி தாறியா, என்று கேட்டிருக்கின்றனர். ஆனாலர நாங்கள் அப்படி கேட்க ஐஊண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் தமிழ் மக்களின் போராட்டங்கள் தியாகங்களாலே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடகாகவே இந்த 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

அத் தீருத்தம் நமக்கு கிடைக்கின்ற போது அரைவாசி, காவாசி, முக்கால்வாசி என்றெலரலாம் இருக்கவில்லலை. அது முழுமையீகத் தான் இருந்த்து. 

அதனை நடைமுறைப்படுத்துகிற காலத்தில் இந்தியா தனது படைகளையும் அனுப்பியிருந்த்து. இவ்வாறு ஒருபக்கம் தன்னுடைய படைகளை அனுப்பிய அதேநேரத்தில்  இராஜதந்திர ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுத்திருந்த்து. 

ஆனால் துரதிஸ்டவசமாக பிரச்சனைகள் தீர்க்க விரும்பாதவர்கள் அதிலே ஒன்றுமில்லை என்று அன்றைக்கு கூறிவிட்டார்கள். அது மாத்திரமல்லலாமல் தும்புதடியால் கூட தொடமாட்டோம் என்றும் கூறியிருந்தனர். அன்று இவ்வாறு கூறியவர்கள் இன்று என்ன கேட்கின்றனர் என்று பாருங்கள்.


இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது  நீண்ட காலத்திற்கு பின்னர் 
 என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருந்தது.

அப்பொழுது அன்றைக்கே  இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும்  நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் எனவும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது.

உண்மையில் இதனையே அவர் மனசுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டிய நேரத்தில் அனைவருமாக செய்யாமல்  நாங்கள் எல்லாம் கோட்டை விட்டுவிட்டது என்பது எங்களுக்கு அசிங்கம் அல்லது அவமானம் என்று தான் நினைக்கிறேன்.

இன்றைக்கு அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது உண்மையாகவே இதில் தவறிழைத்தது  இலங்கையோ இந்திய அரசு அல்லது சர்வதேசமோ அல்ல. அதில தமிழர் தரப்பு தான் முழுமையாக தவறிழைத்து கோட்டைவிட்டிருக்கிறோம்.

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தோடு தென் இலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த  தவறிவிட்டோம். எங்களுக்கு வினை விதைத்தது நாமே தானே உரிய வேறு யாரும் அல்ல என்றார்.

ஆக தென்னிலங்கை அரசாங்கமாக இருக்கலாம் இந்திய அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சர்வதேச சமூகமாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் தங்களின் நலன்களிலேயே அக்கறையாக இருப்பார்கள் எங்கள் நலனில் அக்கறையாக இருக்க மாட்டார்கள். 

இன்று பாலஸ்தீனத்திலும் காசாவிலும் சர்வேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. அந்த போரில் அழிவு முற்றுப்பெறும் வரை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் நமக்கும் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இவர்களை நம்பிக் கொண்டிப்பதை விடுத்து நம் எமது பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்லளாம் என சிந்தித்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post