நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல! மக்களின் உரிமைக்காகவ போராடுகிறோம்! கஜேத்திரகுமார் - Yarl Voice நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல! மக்களின் உரிமைக்காகவ போராடுகிறோம்! கஜேத்திரகுமார் - Yarl Voice

நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல! மக்களின் உரிமைக்காகவ போராடுகிறோம்! கஜேத்திரகுமார்



இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் தலைவரும் பாரராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..

தையிட்டியில் மக்களின் காணிகளுக்குள் கட்டப்பட்ட விகாரையை அகற்றி தமது காணிகளை மீட்டு தருமாறு காணி உரிமையாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தனர். 

அதற்கபைய நாங்கள தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தோம். இதற்கமைய இந்த விகாரை அகற்றப்படும் வரையில் நாம் தொடர்ந்தும் போராடுவோம்.

இங்கு சட்டங்களை வதிமுறைகளை மீறி இந்த விகாரையை இரானுவம் கட்டி முடித்துள்ளது. ஆனாலும் இந்த விகாரை சட்டபூர்வமானது அல்ல என்பதையும் விகாரைக்கென்று வருகின்ற அப்பாவி சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த விகாரை கட்டப்பட்டதாலே இங்கு புத்தர் என்ற பெயரில்  நடக்கின்ற  அநியாயங்களை விளங்க வேண்டும். இந்த விகாரையை தொடர்ந்து வைத்திருப்பதில் அர்த்தம் இல்லாமல் போகும். 

போராட்டங்கள் தொடர்ந்து பலமாக அமைகிற போது தான் தீர்வை அடையலாம். இதற்கமைய பலரும் இன்றைக்கு வந்து இருந்தனர். அனைவரதும் ஆதரவினால் தான் இப் போராட்டம் வெற்றியளித்து இருக்கிறது. 

இதேவேளை  இன்னுமொரு விடயத்தையும் நாங்கள் சொல்ல வேண்டி உள்ளது. அதாவது நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல. ஆனால
இங்கே இருக்க கூடிய மக்ளின் காணிகளை ஆக்கிரமித்து அடாத்தாக கட்டப்பட்ட விகாரையை எதிர்த்து போராடுகிறோம்.

தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான செயற்பீடுகள் எதுவானாலும் நாங்கள் எதிர்ப்போம்.  இன்றைய போராட்டத்தை விடவும் அடுத்த பௌர்ணமிக்கு அதிகளவில் மக்கள் திரள வேண்டும்.

மேலும் உரிமைக்கான எமது இந்தப் போராட்டம் இன்னும் இன்னும் பலமடையும். இதற்கு பின்னால் ஒட்டுமொத்த இனமும் அனிதிரளும். மாற்றங்கள் ஏற்பட வேண்டும். 

கட்சி பேதங்களுக்ப்பபால் ஒண்றிணைந்து வந்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை பற்றி கதைக்கும் அரசாங்கம் தான் ஆட்சியில் இருக்கிறது. 

குறிப்பாக சட்டத்தை மீறி எப்படி ஒரு பொது மகன் கட்டிடம் கட்டினால் அது உடனடியாக அகற்றப்படுகிறதோ அதேபோன்றேசட்டவிரோத விகாரையையும் அகற்ற வேண்டும்.

இது அகற்றபடாவிட்டால்  ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் ஆக்கிரமிப்பிறகு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

மக்களின் காணி உரிமையில் இந்த இரசாங்கம் கைவைக்கிறது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையில் கைவைப்பதாக அமையும் என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post