நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே.
இவ்வாறு வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சு துறைசார்ந்த நிகழ்வுகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியிலேயே உரையாற்றியிருந்தார்.
அதாவது யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்ஞம் கொஞ்சம் தமிழ் தெரியும். ஆகையினால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொடர்ந்து சிங்களத்திலும் கதைக்கிறேன்.
எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அதனால் தமிழில் பேச விரும்புகிறேன். எங்களுக்கு இன மத சாதி பேதமிஎல்லை.
நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை.
இவ்வாறு தமிழில் உரையாற்றிய அமைச்சர் எங்களுக்குள் பேதங்கள் இல்லமல்
ஒருதாய பிள்ளைகளாக ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்றார்.
Post a Comment