தமிழ்க கட்சிகளுக்கு தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே எமக்கு எதிராக போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
யாழ் சாவகச்சேரியில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
அதனால் இங்குள்ள கட்சிகள் பலவும் பயத்தில் கலக்கமடைந்து எம்மை தொடர்த்தும. விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதிலும் தாம் தேர்தலில் வெல்லலாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு பேலிப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென பலரையும் இணைத்து புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் இந்த கூட்டமைப்பே புலிகளிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கே துரோகம் இழைத்திருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் தான் எமக்கான ஆதரவை மக்கள் வழங்க முன்வந்திருந்த போதும் அதனைக் குழப்ப சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் சதி நடவடிக்கைகள், போலி பிரச்சாரங்கள் விமர்சனங்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் எமக்கு எதிராக முன்னெடுக்ப்பட்டாலும் எமது மக்கள் மிகத் தெளிவாக எமக்கான ஆதரவை வழங்குவார்கள்.
இந்த தேசிய மக்கள் சக்தியானது தமிழ்க் கட்சியோ சிங்கள கட்சியோ முஸ்லீம் கட்சியோ இல்லை. உண்மையில். மனிதநேயம் கொண்ட ஓரு அமைப்பு.
இங்குள்ள கட்சிகள் பலவும் எம்மை பார்த்து பயப்பிடுகின்றனர். உண்மையில் எமது மக்களை திரும்பவும் இவர்கள் ஏமாற்ற முடியாது. இனியும் போலித் தேசியம் கதைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
புதிய யுகம் படைத்த இந்த மக்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு சிறந்த படம் புகட்டுவார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து எந்தனை ஆண்டுகள் தான். நாங்கள
மாயாஐஆல வித்தைகாரர்கள் அல்ல.
நாம் வழங்கிய வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இதில் மக்களுக்கு தயக்கம் வேண்டாம். அரசியல் ரீதியில் எம்மை தாக்கமுடியாதவர்கள் எம்மை விமர்சனம் செய்கின்றனர் என்றார்.
Post a Comment