ஏமாற்றுவித்தை காட்டும் அனுரவின் ஜேவிபிக்கு மக்கள் தகுந்த பாடத்தை வழங்க வேண்டும்! சுரேஸ் கோரிக்கை - Yarl Voice ஏமாற்றுவித்தை காட்டும் அனுரவின் ஜேவிபிக்கு மக்கள் தகுந்த பாடத்தை வழங்க வேண்டும்! சுரேஸ் கோரிக்கை - Yarl Voice

ஏமாற்றுவித்தை காட்டும் அனுரவின் ஜேவிபிக்கு மக்கள் தகுந்த பாடத்தை வழங்க வேண்டும்! சுரேஸ் கோரிக்கை



இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஐனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரான காலத்திலும் அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் என்பிபி என்று சொல்லக்கூடிய ஜேவிபி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா.

அதேபோன்றே தாம் ஊழலுக்கு எதிரானவர்கள் எனக் கூறியும் நாட்டை நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக  நடவடிக்ககை எடுப்போம் என கூறி ஆட்சிககு வந்த பின்னர் அவர்கள் எடுத்து நடவடிக்கை என்ன.

மேலும் இனவாதம் மதவாதம் இல்லை என கூறிக் கொண்டு ஆட்சி பீடத்திற்கு வந்த அனுர தரப்பினர்  இப்போது இனவாத மதவாத ரீதியாகவே செற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் காணி விடுவிப்பு
பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை எனத் தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள் இப்போது ஆட்சிக்கு  6 மாதகாலத்திற்கிள் செய்தது என்ன.

இவ்வாறான நிலையில் தான் நாடும் நமதே ஊரும் நமதே என்று சொல்லிக் கொண்டு  வந்திருக்கின்றனர். இவர்களின் இத்தகைய ஏமாற்று வித்தைகளையும் பித்தலாட்டங்களையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் எத்தனையோ தியாகங்கள் இழப்புக்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களை மீளவும் மத்திக்கு வழங்குவது பெரும் ஆபத்து. ஏற்கனவே இழைத்த தவறு போல இனியும் எமது மக்கள் செய்யக்கூடாது.

எனவே தமிழ் மக்கள் அந்த தவறை உணர்ந்து அனுர தலைமையிலான இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது  சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியமானது. 

ஆகவே வடகிழக்கில் இருக்ககூடிய தமிழ் மக்கள் அல்லது முஸ்லிம் மக்களாக இருக்கலாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் ஜேவிபியின் வெருட்டல் உருட்டல் எல்லாத்தையும் பார்த்தவர்கள் நாங்கள். ஆகையினால்  எதைக் கண்டாலும் எமக்கு பயம் இல்லை. இந்த NPp யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். 

அமைச்சர் சந்திரசேகரன்  அவர்களே உங்களது இந்த மிரட்டல் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை விளங்கி கொள்ள வேண்டும். பலவற்றை பார்த்தாவர்கள் இத்தகைய வெருட்டல் உருட்டல் என்பது தவறானது. அதை நிறுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை. எனவே ஏமாற்று  வித்தைகளுக்கு இந்த தேர்தல் சரியான பாடத்தை புகட்டும் என நம்புகிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post